22 டிசம்பர், 2010

கமராக்கள் மூலம் கொழும்பை கண்காணிக்கும் பணி 29ல் ஆரம்பம்


பாதுகாப்பு கமராக்களினூடாக கொழும்பு நகரை கண்காணிக்கும் பணிகள் எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

கொழும்பு நகரில் பொருத்தப்பட்டு வரும் சி.சி.சி.வி. கெமராக்களினூடாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும் திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட ஏற்பாடாகியிருந்தது. ஆனால் மேற்படி திட்டம் 29ம் திகதி ஆரம்பிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி கூறினார்.

முதலில் இந்த திட்டம் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்பட உள்ளதோடு அடுத்து ஏனைய சகல பிரதான நகரங்களில் கமராக்களை பொருத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கொழும்பு நகரில் உள்ள பிரதான இடங்களில் கமராக்கள் பொருத்தப்பட்டு அதனை கவனிக்க விசேட பொலிஸ் குழு வொன்றும் நியமிக்கப்படவுள்ளது. குற்றச் செயல்கள் விபத்து என்பவற்றை கண்காணிக்கும் நோக்குடனே கமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக