24 நவம்பர், 2010

பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு ஆசனம்





ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கென நேற்று முதல் சபையில் ஆசனமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் கூறியது. இதன்படி இவ்வளவு காலமும் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனம் நேற்று முதல் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆசனத்திற்கு அடுத்துள்ள சபை முதல்வரின் ஆசனம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.

18 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் 3 மாதங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்க வேண்டும்.

இதன்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் சபைக்கு பிரசன்னமாகி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக