24 நவம்பர், 2010

பதவியினை கதிரையுடன் மட்டுப்படுத்தாமல் இதயசுத்தியுடன் பணியாற்றுங்கள் புதிய செயலாளர்கள் மத்தியில் ஜனாதிபதி




தமது பதவியினை கதிரையுடன் மட்டுப்படுத்தாது செயற்பாட்டு ரீதியில் இதய சுத்தியுடன் மக்களுக்கு பணியாற்றுமாறும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அர்ப்பணிக்குமாறும் ஜனாதிபதி புதிய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

புதிய அமைச்சுக்களுக்கு நியமிக்கப் பட்டுள்ள செயலாளர்கள் நேற்று (23) மாலை தமக்குரிய நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்ட துடன் அதன் பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அறிவுரை வழங்கினார்.

அத்துடன் அந்தந்த அமைச்சுக்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் தமது பிரச்சினைகள் பற்றிய கடிதங்களுக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை குறித்த அமைச்சின் செயலாளர் தனிப்பட்ட முறையில் தேடிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண் டார்.

அனைத்து அமைச்சுக்களுக்கும் “மஹிந்த சிந்தனை தொலை நோக்கின்” பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அதன் பிரகாரம் மக்களுக்கு பணியாற்ற வேண்டுமெனவும், அதிலுள்ள பணிகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் கடமையெனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

அதேபோன்று இந்த நாட்டின் அரச துறை பற்றியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக