24 நவம்பர், 2010

திருகோணமலையில் மாணவர்களிடம் போலி நாணயத்தாள்



திருகோணமலை மாவட்ட கின்னியாவைச் சேர்ந்த மூன்று மாணவர்களிடமிருந்து போலி நாணயத்தாள்கள் 16 ஐ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதில் 11 நூறு ரூபா நோட்டுக்களும் மற்றும் ஐந்து ஆயிரம் ரூபா நோட்டுக்களும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவர்கள் போலி நாணயத்தாள்களை மாற்ற முட்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இம் மாணவர்களுக்கு போலி நாணயத் தாள்களை வழங்கியவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரைப் பொலிஸார் தேடிவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக