24 நவம்பர், 2010

"வெள்ளைக் கொடி' குறித்த ஐ.நா.வின் கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பப்படவில்லை

சண்டே லீடர்' பத்திரிகையில் வெளியான வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ஐ.நா.வினால் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பூரணமான பதில் அனுப்பப்படவில்லை என்பதுடன் முதல் கடிதமும் இரண்டு நாட்களிலேயே வாபஸ் பெறப்பட்டது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தூதுவராலயத்தின் வதிவிட பிரதிநிதியான சேனுக்க செனவிரத்ன தெரிவித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் நான்காவது சாட்சியாக நேற்று செவ்வாய்க்கிழமை சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக