24 நவம்பர், 2010

சிம்கார்ட்டில் ரூபா ஒன்றரை இலட்சம் மோசடி செய்த ஒருவர் கைது

வெளிநாட்டில் தொழில் புரிந்து விடுமுறையில் நாடு திரும்பியவரின் சிம்கார்ட்டில் ரூபா 150000 மோசடி செய்த ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

குருநாகல் மாவட்டத்திலுள்ள வாரியபொல என்ற இடத்தில் வசித்து வந்த ஒருவர் தற்போது இங்கிலாந்தில் தொழில் புரிகின்றார்.

அவர் விடுமுறைக்காக இலங்கை வந்த சமயம் அலவ்வை என்ற இடத்தில் தனது இங்கிலாந்தில் பதிவு செய்த சிம்மை பாவிப்பதால் கூடுதல் பணம் செழுத்த வேண்டும் என்பதனால் இலங்கையில் தனது பெயரில் புதிய சிம் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளார்.

இதேவேளை இங்கிலாந்தில் வைத்து பாவித்த சிம்மை மறதியாக அக்கடையில் விட்டுச் சென்றார். தனது புதிய சிம் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தியதால் பழைய சிம் பற்றி தேவை நினைவு வரவில்லை.

தனது இங்கிலாந்து பட்டியலைப் பார்த்த போதுதான் குறித்த சிம் மூலம் ஒன்றரை இலட்சம் வரை குறித்த கடைக்காரர் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இதுவிடயமாக பொலிஸில் செய்த முறைப் பாட்டை அடுத்து சிம் விற்பனையாளரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக