24 நவம்பர், 2010

சிறுமிகளிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தொண்டர் ஆசிரியருக்கு விளக்கமறியல்

தரம் நான்கு மற்றும் ஐந்து வகுப்புக்களில் கல்விக்கற்கின்ற மாணவிகள் ஏழு பேரிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சதுன்விதாரண எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

டிக்கோயாவுக்கும் நோட்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தொண்டர் ஆசிரியராக சேவைபுரிந்த 25 வயதுடைய பாலச்சந்திரன் ஜெகதீஸ்வரன் என்ற தொண்டர் ஆசிரியரொருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நேற்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொண்டராசிரியர் குறித்து பெற்றோர் ஒருவர் நோட்டன் பொலிஸில் பதியப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக நோட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற ஒன்பது தொடக்கம் பத்து வயது வயதையுடைய ஏழு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக