24 நவம்பர், 2010

ஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து





இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி வழங்கப்படும் என உறுதி வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பியிருக்கும் கடிதத்திலேயே இந்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலமானது இலங்கை மக்களுக்கான அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத் துக்கு முக்கியமான காலமாக அமையும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக