24 நவம்பர், 2010

நிதிச்சந்தை வரலாற்றில் புரட்சிகர மாற்றம்: உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதிபெற அனுமதி






உள்நாட்டு நிறுவனங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் எத்தகைய தடையுமின்றி வெளிநாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை மத்திய வங்கி வழங்கியுள்ளது.

நேற்றைய தினம் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது இலங்கையின் நிதிச்சந்தை வரலாற்றில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்து மெனவும் 2011 ற்கான வரவு செலவுத்திட் டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த வெளிநாட்டு நிதிப்பரிமாற்றம் தொடர்பான ஆலோசனைகளே இத்தீர்மானத்திற்கு வழிவகுத்துள்ளன எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்கப்ரால் தெரிவித்தார்.

நாட்டில் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தமது வர்த்தகத்தை விரிவாக்குவதற்கான நிதித்தேவையைக் கொண்டுள்ளன. அதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள விரும்பும் வர்த்தகர்கள் உள்ளூர் நிதியிலிருந்தே அதனை பெற்றுக்கொள்ள விளைவதால் தேசிய நிதி நிலையில் அழுத்தங்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அநாவசியமான அழுத்தத்தினைச் சரி செய்வதற்கும் வர்த்தக நிறுவனங்களுக்கான நிவாரணமாகவும் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்த அவர், நிறுவனங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனவும் தெரிவித்தார். மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடொன்று நேற்று மத்திய வங்கி தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இது தொடர்பில் விளக்கமளித்த ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,

எவ்வித தாமதங்களுமின்றி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு நிதிக்கட்டுப்பாட்டுத் திணைக்களத்தில் தனியான பிரிவொன்று ஏற்படுத்தப்படவு ள்ளது. அதேவேளை, இந்நாட்டு நிதி கொடுக்கல், வாங்கல்களை இலகுபடுத்தும் நோக்கில் ஒன்பது புதிய தீர்மானங்களை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது. இதில் ஏழு முக்கிய தீர்மானங்கள் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையை வதிவிடமாகக் கொண்ட ஒரு தனிநபர் ஒருங்கிணைந்த அல்லது ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளை முதலீடு செய்வதற்கும் இங்குள்ள காப்புறுதி நிறுவனங்கள் வெளிநாடுகளில் தமது வளங்களின் ஒரு பகுதியை முதலீடு செய்வதற்கும் மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இத்தீர்மானம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறை க்கு வரவுள்ளது. அத்துடன் வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கைக்குள் வர்த்தக நிறு வனங்களை ஆரம்பிப்பது உட்பட மேலும் 6 தீர்மானங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக