24 நவம்பர், 2010

மெனிக்பாம் 2ஆம் வலயம் மூடப்பட்டுள்ளது: வடபகுதிக்கு பொறுப்பான மீள்குடியேற்ற அதிகாரசபை

வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் உள்ள 2ஆம் வலயம் நேற்று முதல் மூடப்பட்டுள்ளதாக வட பகுதிக்கு பொறுப்பான மீள்குடியேற்ற அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நிவாரணக் கிராமம் 2ஆம் வலயத்தில் உள்ள 855 பேர் முல்லைதீவு தேராவில் மற்றும் புதுக்குடியிருப்பில் மீளக்குடியமர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வலயம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மீளக்குடியமர்த்தப்பட்டதைத் தொடர்ந்து 15 ஆயிரத்து 676 பேர் தற்போது வவுனியாவில் உள்ள நிவாரணக் கிராமத்தில் உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 158 பேரும், மொத்தமாக வடபகுதிக்கு 17 ஆயிரத்து 183பேரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக