27 நவம்பர், 2010

சிரேஷ்ட அமைச்சர்கள் சகல அமைச்சரவை கூட்டங்களிலும் பங்குகொள்ள முடியும்

சிரேஷ்ட அமைச்சர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மட்டுமே அமைச்சரவைக்கு சமுகமளிக்க முடியும் என்று எதிர்க்கட்சி தெரிவிக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அவர்கள் சகல அமைச்சரவைக் கூட்டங்களிலும் கலந்துகொள்ள முடியும் என ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி சார்பாக வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் ஆரம்பித்து உரையாற்றிய எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க; சிரேஷ்ட அமைச்சர்கள் குறித்து கருத்து தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், அரசியல் யாப்பில் உள்ள நியதிகளின் அடிப்படையிலே சிரேஷ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். ஐ.தே.க ஆட்சியிலும் இவ்வாறான அமைச்சர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என்றார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, ஐ. தே. கட்சி யில் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அரசியல் யாப்பின் எந்த சரத்தின் படி இவர்கள் நியமிக்கப்பட்டனர் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஜோன் அமரதுங்க எம்.பி. அதுவும் தவறான செயற்பாடுதான் என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக