3 அக்டோபர், 2010

தங்களை விடுதலை செயயுமாறு மட்டு.அரசியல் கைதிகள் த.தே.கூ.விடம் கோரிக்கை

எவ்வித விசாரணைகளுமின்றி மிக நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விசாரணையின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று மாலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கைதிகளைப்பார்வையிடச்சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்புமட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் அரசியல் கைதிகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்..

இதற்கு பதிலளித்த அரியநேத்திரன் எம்.பி.இது தொடர்பாக பலமுறை ஜனாதிபதியிடம் கேட்டுள்ளோம் ஆனால் விடுதலை தொடர்பாக ஆரோக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்டபட்டதாக தெரியவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக