3 அக்டோபர், 2010

ஆஸி. நோக்கிச் சென்ற படகொன்று கிறிஸ்மஸ் தீவில் மடக்கிப்பிடிப்பு

37 பேருடன் அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த படகை அவுஸ்ரேலிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த இலங்கைத் தமிழ் அகதிகளின் படகினையே அவுஸ்ரேலிய கடற்படையினர் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 37 பேருடன் அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் படகு ஒன்றினை கிறிஸ்மஸ் தீவிற்கு அருகில் வைத்து அவுஸ்ரேலிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அதில் இருந்தவர்கள் அனைவரும் கிறிஸ்மஸ்தீவு அகதிகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக