3 அக்டோபர், 2010

இலங்கைக்கு செல்லும் ஜேர்மனியர்களுக்கு கட்டுப்பாட்டில் தளர்வு

இலங்கைக்கு செல்லும் ஜேர்மனியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப் பாட்டினை மேலும் தளர்த்த உள்ளதாக ஜேமன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் தற்பொழுது நிலவும் அமைதியான சூழ் நிலையை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜேமன் தூதுவர் ஜென்ஸ் புலோட்னர் தெரிவித்துள்ளார்.

இந்த தளர்வு இம்மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை வடகிழக்கு மாகாணங்களில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கை அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ஜேர்மனிய அரசங்கம் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக