3 அக்டோபர், 2010

யாழ். கிளிநொச்சி நீர் விநியோக திட்டம் ரூ. 2000 கோடியில் ஆரம்பம்


யாழ். கிளிநொச்சி பாரிய நீர் விநியோகத் திட்டம் (இரணை மடுத் திட்டம்) இரண்டாயிரம் கோடி ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட வுள்ளது.

2002 இல் ஆசிய அபிவிருத்தி வங்கி, தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை மற்றும் யாழ். கிளிநொச்சி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட 55 கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரதிபலிப்பாகவே இத்திட்டம் முழுமை பெற்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். கிளிநொச்சி நீர் விநி யோகத் திட்டத்தின் அபிவிருத்தி எனும் தலைப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பின் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட முயற்சியை அடுத்து 2000 கோடி ரூபா நிதி யாழ். கிளிநொச்சி நீர் விநியோகத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிதியானது வடக்கு பிர தேசத்தின் குடிநீர் பற்றாக் குறையான அனைத்து பிரதேச மக்களின் தேவைக்கும் பயன் படுத்தப்படவுள்ளது.

அரசின் தேசிய கொள்கை பிரகாரம் 2015 இல் 85%மான மக்களுக்கு பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்க வேண்டும். 2025 இல் 100 வீதமான குடி தண்ணீர் தேவை பூர்த்தி செய் யப்பட வேண்டும்.

ஆனால், தற்போது பிரதேச சபை நீர் வழங்கல் வடிகால் சபை மூலம் யாழ்ப்பாணத்திற்கு 3.2 வீத நீரும் கிளிநொச்சிக்கு 1.1 வீத நீரும் மன்னாருக்கு 20.3 வீத நீரும் வவுனியாவுக்கு 4.5 வீத நீரும் வழங்கப்படுகிறது.

தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியானது, பாரிய முதலீட்டுத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் நீர் விநியோகத் திற்காக பெரும் நிதியை செலவு செய்கின்றது.

இதில் கிளிநொச்சி – யாழ். நீர் விநியோகத் திட்டத்தின் கீழ் (இரணை மடு) ஒரு நாளைக்கு 27 ஆயிரத்து 500 மீற்றர் கீயுப் குடி தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், 88 ஆயிரத்து 500 மீற்றர் கீயுப் குடிதண்ணீர் ஒருநாளைக்கு யாழ். கிளிநொச்சி நீர் விநியோகத்திற்கு முழுமையாக தேவையாக உள்ளது.

மிகுதியான 61 ஆயிரம் மீற்றர் கீயுப் குடிதண்ணீரை நிலத்தடி நீரை பாதுகாத்து வழங்க உத்தேசித்துள்ளோம்.

இதற்காக குறைந்தது 40 வருடங்கள் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை போராட வேண்டியுள்ளது.

இதேவேளை, இரணைமடுத் நீர்த் திட்டத்தை 2 அடி உயரம் உயர்த்தி தேவை யான நீரை தேக்கி, வான் பாயும் வாய்க் கால் தொகுதி, பாரிய கடவை பாலம், திருவையாறு ‘லிப்ற்’ விவசாய நீர்ப்பாசன திட்டம் என்பவற்றை விரைவில் புனரமைத்து கொடுக்கவுள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக