15 அக்டோபர், 2010

ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர்களை பலாத்காரமாக அழைத்துச் செல்ல முயற்சி பேராதனை பல்கலையில் பதற்றம்

கொழும்பில் நடைபெறவுள்ள பல்கலைக்கழக மாணவர்களது ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர்களை பலாத்காரமாகக் கூட்டிச்செல்ல முயன்ற மாணவர்களுக்கும், விரிவுரை யாளருக்குமிடையே ஏற்பட்ட சர்ச்சை காரணமாக நேற்று மூன்று மணித் தியாலங்கள் பல்கலைக்கழக சூழலில் பதற்றம் நிலவியது.

பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் விஞ்ஞான பீடத்துக்கு வந்து அங்கு விரிவுரைக்காக வருகை தந்த மாணவர்களை கொழுப்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாடத்துக்காக அழைத்துச் செல்ல முயன்ற பொழுது அதனை தடுக்க முயன்ற விஞ்ஞான பீட விரிவுரையாளர் கலாநிதி ஜகட் குணதிலக்காவுக்கும் மாணவர் களுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் காரணமாக விஞ்ஞான பீட உத்தியோகஸ்தர்கள் பொறியியல் பீட மாதவன் ஒருவரை பிடிக்க முயன்ற பொழுது மாணவன் ஓடித் தப்பித்துச் சென்றுள்ளார். இதனால் தப்பியோடியவர் பிடிபடும்வரை வேறு பொறியியல்பீட மாணவன் ஒருவரை பிடித்து வைத்துக்கொண்டனர்.

இதனாலேயே இந்த பதற்றம் ஏற்பட்டது. தப்பிச் சென்ற மாணவன் பிடிபடாவிட்டால் இந்த மாணவனைப் பொலிஸில் ஒப்ப டைப்பதாக தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக