15 அக்டோபர், 2010

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் சிக்கும் அபாயம்: அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை

பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் சிக்கும் அபாயம் உள்ளது என்று அமெரிக்காவின் ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

÷அணு ஆயுதங்கள் பத்திரமாக உள்ளதாக பாகிஸ்தான் தொடர்ந்து உறுதிமொழி அளித்து வந்த போதிலும், பயங்கரவாதிகளிடம் சிக்குவதற்கான ஆபத்து உள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இப்போது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆய்வறிக்கை அளிக்கும் அமைப்பு (சிஎஸ்ஆர்) இந்த அறிக்கையை அளித்துள்ளது.

÷பாகிஸ்தானில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக அந்நாட்டு அரசியல் தலைவர்கள் அளிக்கும் உறுதிமொழியின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாக உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்கும் அபாயம் உள்ளது. பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களிடம் அணுசக்தி தொழில்நுட்பம் சென்றாலும் அதன் மூலம் பயங்கவாதிகளுக்கு அணு ஆயுதம் கிடைக்கும் அபாயம் உள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

÷மொத்தம் 24 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் பாகிஸ்தானிடம் 60 அணு குண்டுகள் இருப்பதாகத் தெரிகிறது. இதைவிட கூடுதல் எண்ணிக்கையில்தான் இருக்கக் கூடும் என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக