15 அக்டோபர், 2010

ஐந்து வருடங்களில் 77, 000 ஈராக்கியர்கள் கொலை : அமெ. இராணுவம் தகவல்

ஈராக்கில் கடந்த 5 வருட காலத்தில் சுமார் 77, 000 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் கணக்கிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் உள்ளடங்குகின்றனர்.

இதுவரை அமெரிக்க இராணுவத்தினால் வெளியிடப்பட்ட கணக்கெடுப்புக்களில் இது மிகவும் விரிவானதென தெரிவிக்கப்படுகின்றது.

இக்கணக்கெடுப்பு 2004 ஜனவரி முதல் 2008 ஆகஸ்ட் வரையுள்ள காலப்பகுதிக்குரியது எனக் கூறப்படுகிறது.

இதுவே ஈராக்கின் இருளடைந்த காலப்பகுதியாகக் கருதப்படுகின்றது.

ஆனால் ஈராக்கிய மனித உரிமைகள் அமைச்சு, கடந்த வருடம் வெளியிட்ட கணக்கெடுப்பில், 85,694 பேர் கொல்லப்பட்டார்கள் எனத் தெரிவித்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக