14 அக்டோபர், 2010

இயக்கச்சி மீள்குடியேற்றப் பகுதியில் வெடிப்புச் சம்பவம் : மாணவர் படுகாயம்


இயக்கச்சியில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மாணவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மீள் குடியமர வந்த மேற்படி குடும்பத்தினர் தங்கள் வீட்டைத் துப்புரவு செய்து, குப்பைகளைக் கூட்டித் தீயிட்ட வேளை, அவற்றுக்குள் இருந்த வெடிபொருள் பாரிய சத்தத்துடன் வெடித்தது. இதில் இயக்கச்சி கோவில் வீதியைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் துளசிகரன் என்பவர் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்தவர் முதலில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக