15 அக்டோபர், 2010

பைலட் நடுவானில் மரணம்





தோகா:கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் பைலட் நடுவானில் மரணமடைந்ததால், அந்த விமானம் மலேசியாவிற்கு திருப்பிடவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரிலிருந்து கத்தார் நாட்டிலுள்ள தோகா நகருக்கு, கத்தார் நாட்டு ஏர்வேஸ் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பைலட்டிற்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மரணமடைந்தார்.

இதுகுறித்து துணை விமானி அருகிலிருந்த கோலாலம்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து விமானத்தை தரையிறக்க அனுமதி கோரினார். விமானத்தை தரையிறக்க கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர். இதையடுத்து அந்த விமானத்தை துணை விமானி கோலாலம்பூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார்.விமானத்தில் மரணமடைந்த கேப்டன் இந்தியர் என்றும், அவருக்கு வயது 43 என்றும் கூறப்பட்டது. விமானியின் மரணத்திற்கு கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக