22 செப்டம்பர், 2010

சமுக, பொருளாதார இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்தே அபிவிருத்தி உலக புலமை சொத்து சங்க நிகழ்வில் அமைச்சர் றிஸாட்

இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலமாக மறுக்கப்பட்டு வந்த சமாதானம் இப்போது மீண்டும் புதுவேகத்துடன் உதயமாகின்றது. இப்போது நாம் புனரமைப்பு, மற்றும் நல்லிணக்கம் என்பன வற்றை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றோம். நீண்டகால சமூக பொருளா தார இலக்குகளுக்கு முன்னுரிமையளித்தே நாம் எமது அபிவிருத்தித் திட்டங்களை வடிவமைத்து வருகின்றோம் என்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஸாட் பதியுதீன் கூறினார்.

ஜெனீவாவில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (20) ஆரம்பமான உலக புலமைச் சொத்து சங்கத்தின் 48வது உயர் மட்டத்தொடர் கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் றிஸாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-

இலங்கை பல தசாப்தகால இன்னல்களுக்கு மத்தியிலும் கடந்த ஐந்து வருடங்களாக சராசரியாக 5 வீத பொருளாதார வளர்ச்சியைப் பேணி வருகின்றது. 2010 இன் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8.5 வீதமாகப் பதிவாகியுள்ளது. 2002 ஆம் ஆண்டுக்குப் பின் அதி உயர் பொருளாதார வளர்ச்சியாக இது பதிவாகியுள்ளது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவையும் மீறி இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எமது அபிவிருத்தி தொடர்பான முன்னுரிமைகள் மூலோபாய அணுகுமுறைகள் என்பன மஹிந்த சிந்தனை எதிர்கால வேலைத்திட்டங்களோடு இரண்டறக் கலந்தவையாகக் காணப்படுகின்றன.

எமது ஜனாதிபதி முன்வைத்துள்ள தேசத்தைக் கடடியெழுப்பும் வேலைத் திட்டமே மஹிந்த சிந்தனை எனக் குறிப்பிடப்படுகின்றது. இலங்கையை ஒரு அறிவு பூர்வமான மையமாக உருவாக்குவது உட்பட்ட பல்வேறு மூலோபாயத் திட்டங்களை இது கொண்டுள்ளது. இதேபோல் வர்த்தகம், விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து சக்தி வளம் என்பனவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் இன்றைய இந்த உயர் மட்டக் கூட்டத் தொடரின் தொனிப் பொருள் புத்தாக்கம், வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பனவற்றில் புலமைச் சொத்தின் பங்கும் உறுப்பு நாடுகளின் அனுபவமும் என்ற தலைப்பு எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் உற்சாகமூடுவதாக அமைந்துள்ளது. எமது மக்களுக்கு சிறந்த எதிர்காலம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதே இங்குள்ள அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளினதும் எண்ணமாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.

உலக புலமைச்சொத்து அமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையிலும் பாரிய மனித குலம் என்ற குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற வகையிலும் எமது அனுபவம், ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கள், பூலோக ரீதியான நன்மைகளுக்கும், மனித குலப் போட்டிகளுக்கும் தூண்டுதலாக இருக்கின்றன என்பதேயாகும். இந்த வகையில் புத்தாக்கக் கண்டுபிடிப்புக்களும் புலமைச் சொத்துக்களும் சமூக, பொருளாதார அபிவிருத்திகளை மேம்படுத்தக் கூடியவையாகும்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் எமது துரித செயற்பாடுகள், ஆசியாவில் இலங்கையை ஒரு அறிவு மையமாகக் கட்டியெழுப்பல் என்பனவற்றைப் பொறுத்தமட்டில் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய ரீதியாக பலப்படுத்தப்பட்ட ஆக்கபூர்வமான ஒரு சூழல் ஒழுங்கு முறையைக் கட்டியெழுப்ப வேண்டியது எமது தேவையாக உள்ளது. இது தொடர்பாக நாம் ஏற்கனவே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த விடயத்தில் உலக புலமைச் சொத்து சங்கத்தின் ஆதாரவையும் ஒத்துழைப் பையும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக