22 செப்டம்பர், 2010

நியூயோர்க்கிற்கு சென்ற ஜனாதிபதி தலைமையிலான குழுவிற்கு 14 கோடி ரூபா செலவு: ஐ.தே.க

ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது உச்சி மாநாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவிற்கு 14 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டி காட்டியுள்ளது.

இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அத்தநாயக்க, ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ளவதற்கு ஒரு நாட்டை பொறுத்தவரை நான்கு பேர் பங்கு பற்றுவது போதுமானது. ஆனால் தற்போது நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் பங்கு கொள்ள 130 பேர் சென்றுள்ளனர். இவர்களுக்கான செலவு 14 கோடி ரூபா ஆகும்.

நாட்டில் தற்போது பொருட்கள் விலை அதிகரிக்கப் படுகின்றது. இந்நிலையில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதால் நாட்டில் மக்களே பெரும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக