25 செப்டம்பர், 2010

சப்ரகமுவவில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க அரசு அனுமதி

சப்ரகமுவ மாகாணத்தில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க அரசு அனுமதி அளித்துத்துள்ளது என சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில,; “அமெரிக்கா, இந்தியா மற்றும் பெலராஸ் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்நிறுவனங்களின் உதவியுடன் மிக விரைவில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவுள்ளோம். இப் பல்கலைக்கழகம் மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளை கொண்டு இயங்கும்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக