25 செப்டம்பர், 2010

சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்!






சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயத் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய, சரத் பொன்சேகாவிற்கு, சிறிலங்கா இராணுவ நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், சரத் பொன்சேகாவை விடுதலை செய்து, நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த வலியுறுத்தி, உலகின் பல்வேறு நாடுகளிலும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வெளிநாடுகளில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களின் முதற்கட்டமாக. சிங்களவர்கள் அதிகமாக வாழும் இத்தாலி நாட்டின், மிலானோவிலும், ரோமிலும், பிரான்சின் பாரிசிலும், நடைபெறவுள்ளதாகவும், இப்போராட்டங்களில், சரத்பொன்சேகாவின் புதல்வி அப்சரா பொன்சேகா, வெளிநாடுகளில் நடைபெறவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் சரத் பொன்சேகாவின் புதல்வி அப்சரா பொன்சேகா, பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூன ரணதுங்க, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக