1 ஆகஸ்ட், 2010

கட்டுநாயக்கவுக்கும் பலாலிக்குமிடையில் பயணிகள் விமானசேவை







இந்த வருட இறுதியில் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் பலாலி விமான நிலையத்திற்குமிடையே பயணிகள் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த சேவைகளுக்காக 50 இருக்கைகளை கொண்ட விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தயாசிறி திசேரா தெரிவித்துள்ளார். குடாநாட்டின் வாழும் தமிழ்மக்களின் வேண்டுகோளுக்கு அமையவே இச்சேவை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடக்கத்தில் ஒரு சேவை மட்டுமே இடம்பெறவுள்ளது. மேலதிக சேவைகள் மக்களின் தேவைக்கமைய அதிகரிக்கப்படும் அதேவேளை, இச்சேவைக்காக சாதாரண கட்டணங்களே அறவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக