1 ஆகஸ்ட், 2010

ஜனாதிபதியுடன் காதர் எம். பி. நேற்று கண்டியில் சந்திப்பு





கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆர். எம். ஏ. காதர் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டியில் வைத்து சந்தித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்தே பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆர். எம். ஏ. காதர் சந்தித்துள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் காதர் ஜனாதிபதிக்கு ஆதரவாகவே பேசி வருவதுடன் அண்மையில் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட மற்றும் அவசரகால நீடிப்பு போன்ற வாக் கெடுப்புகளின் போது அரசாங்கத் திற்கு ஆதரவாகவே வாக்களித் திருந்தார்.

இந் நிலையில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி காதருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக நேற்றுக் காலை அவர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருப்பதாக தெரிய வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக