1 ஆகஸ்ட், 2010

பாதுகாப்பமைச்சின் அனுமதியின்றி யாழ் நோக்கி பயணித்த இந்தியப் பிரஜை கைது

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் இன்றி யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்திய பிரஜையொருவர் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த இந்திய பிரஜையை எதிர்வரும் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஸ் ஒன்றின் மூலமாகவே அந்த இந்தியப் பிரஜை யாழ் நோக்கி புறப்பட்டுள்ளார். வவுனியா பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.pl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக