1 ஆகஸ்ட், 2010

மங்கள சமரவீரவின்சு.க.மக்கள் பிரிவு கலைப்பு?

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு அடுத்த வாரமளவில் கலைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது மேற்கொள்ள வுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், இந்தக் கட்சி, கலைக்கப்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஐக் கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க, தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை தமது கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில் கட்சி கலைக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுடன், கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.(வீர)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக