8 ஜூலை, 2010

டாக்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு இந்தியர்களை வேலைக்கு அமர்த்த இங்கிலாந்து ஆஸ்பத்திரிகள் தீவிரம்

Vollbild anzeigen

இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்திய டாக்டர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான முயற்சியில் அந்த நாட்டு அரசாங்கம் ஈடுபட்டு உள்ளது. வேல்ஸ் பிரதேசத்தில் மட்டும் 400 டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள். தகுதியான டாக்டர்கள் கிடைக்காததால், பல இடங்களில் ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இங்கிலாந்தின் டாக்டர்கள் தேவையை நீண்டகாலமாக இந்தியா தான் தீர்த்து வந்தது. ஆனால் 2006-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய டாக்டர்களை வேலைக்கு அமர்த்துவது குறைக்கப்பட்டது. குடியேற்ற சட்டத்தில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய டாக்டர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது குறைந்தது.

வேல்ஸ் பகுதியில் கடும் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக 51 டாக்டர்கள் 2 ஆண்டு கால ஒப்பந்தத்தின் கீழ் வேலைக்கு அமர்த்தப்பட இருக்கிறார்கள். இந்தியாவில் 2 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் உள்ளவர்களை மட்டுமே வேலைக்கு எடுப்போம் என்று வேலைக்கு டாக்டர்களை தேர்வு செய்யும் பொறுப்பில் உள்ள லியோனா வால்ஷ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக