8 ஜூலை, 2010

தலைமை நீதிபதி சீனாவில் தூக்கிலிடப்பட்டார்










சீனாவில் உள்ள சோங்கிங் நகரின் முன்னாள் தலைமை நீதிபதி வென் கியாங் தூக்கிலிடப்பட்டார். இவர் நகர போலீஸ் துணை தலைவராகவும் இருந்ததால், குற்றவாளிகளை பாதுகாத்து வந்தார். குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்து வந்தார் என்றும் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

போலீஸ்காரர்களாக இருந்து கொள்ளைக்காரர்களாக மாறியவர்களுக்கு இவர் பக்க பலமாக இருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. வழக்கை விசாரித்த கோர்ட்டு இவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.

வென் கியாங்கை பதவி நீக்கம் செய்து அவர் மீது வழக்கு தொடர காரணமாக இருந்த சோங்கிங் நகர கம்ïனிஸ்டு தலைவர் போ ஜிலாய் செல்வாக்கு இதனால் உயர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக