8 ஜூலை, 2010

கருணாவின் போதை நடனம் அம்பலமானாதால் அதிகாரியின் பணி பறிப்பு

மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மதுபோதையில் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட ஒளிப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து மீள் குடியேற்ற அமைச்சரின் ஊடகச் செயலாளராகச் செயற்பட்டவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் பணிப்பின் பேரிலேயே இந்தப் பதவிப் பறிப்பு இடம்பெற்றுள்ளது

. குறித்த அதிகாரியின் வீட்டுத் திருமண விழாவிலேயே இவ்விருவரும் மது போதையில் நடனமாடியிருந்தனர்.

இவர் மூலமாகவே இந்த ஒளிப்படம் ஊடகத்துறையினருக்குக் கிடைத்திருக்க வேண்டும் எனச் சந்தேகித்த அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக