8 ஜூலை, 2010

இலங்கை தமிழரை கடத்தி கப்பம் பெற்றவர் சென்னையில் கைது

பிரித்தானியாவில் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர் ஒருவர் விடுமுறையில் சென்னை வந்தபோது அவரைக் கடத்திச் சென்று அவரது மனைவியிடம் ரூ.17.5 லட்சம் பணத்தைப் பறித்த குழுவினரை சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக சென்னை வந்திருந்த அவர், கடந்த யூன் மாதம் 22 ம் தேதி காரில் திருவல்லிக்கேணிக்கு சென்று கொண்டிருந்த போது, முற்சக்கர வண்டியில் வந்த சிலர் வழி மறித்து கடத்திச் சென்று ஒரு வீட்டில் 2 நாட்கள் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

சண்முகவேல் என்பவரும் பாலா என்பவரும் இலங்கைத் தமிழர்கள் பிரித்தானிய விசா பெறுவதற்கு உதவும் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் இதற்காக தலா 7 லட்சம் ரூபா பணம் அறிவிட்டுவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சண்முகவேலை கடத்தி ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதும், பின்னர் பல்லாவரத்தில் வைத்து சண்முகவேல் மனைவியிடம் இருந்து ரூ.17.5 லட்சத்தை பெற்றுக் கொண்டு அவரை விவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ராதிகா 17.5 லட்சம் கொடுத்ததையடுத்து சண்முகவேல் அண்ணாநகரில் வைத்து விடுதலை செய்யப்பட்டு;ள்ளார். இது தொடர்பாக சண்முகவேல் கொடுத்த புகாரின்பேரில் பொலிஸார் மேற்படி குழுவினரைக் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள பாலா, சிவா ஆகியோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக