8 ஜூலை, 2010

காருக்கு தள்ளுபடி கோரிய ஹிட்லரின் கடிதம் ஏலம்






பெர்லின் :பென்ஸ் காரின் விலையில் தள்ளுபடி கோரி, சர்வாதிகாரி ஹிட்லர் எழுதிய கடிதம் அண்மையின் ஏலம் விடப்பட்டது.

சர்வாதிகாரி ஹிட்லர், அரசியல் புரட்சி காரணமாக, 1924ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள், ஜெர்மனியில் லேண்ட்ஸ்பெர்க் சிறையில் இருந்தார். மனதளவிலும், பொருளாதார ரீதியிலும் சோர்வுற்றிருந்த அவர், பென்ஸ் கார் ஒன்றை தனது பயன்பாட்டுக்காக வாங்க விரும்பினார்.எனவே, காரின் விலையில் தனக்கு சலுகை அளிக்க வேண்டுமென்று, கார் டீலருக்கு கடிதம் எழுதியிருந்தார். தான் எழுதிய புத்தகத்தின் மூலம் வரும் தொகையை தான் எதிர் பார்த்திருப்பதாகவும், அது கிடைத்தவுடன் பணத்தை செலுத்துவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.கடந்த 1924, செப்டம்பரில் எழுதப்பட்ட அந்த கடிதத்தின் ஒரு பகுதியை, "பில்ட்' என்ற நாளிதழ் வெளியிட்டது.

அந்த கடிதத்தில், ஹிட்லர் தனது பணிகளுக்கான ஊதியம் டிச., மாத இறுதியில் கிடைக்குமென்றும், இல்லையென்றால் கடன் வாங்கி காருக்கான முன்பணத்தை செலுத்துவதாகவும் எழுதியுள்ளார்.மேலும் தனக்கு காரின் விலையில் 1000 மார்க் (ஜெர்மனி நாணயம்) தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரியிருந்தார்.ஹிட்லர் எழுதிய கடித்தையும், அவர் சிறையின் பயன்படுத்திய பொருட்களையும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக