20 ஜூலை, 2010

ஊடகவியலாளர் மேம்பாட்டுக்காக அதிகாரசபை அமைக்கத் திட்டம்




உதவும் வகையில் ஊடக அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார்.

கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக் கான கருத்தரங்கொன்றை கண்டி சுவிஸ் ஹோட்டலில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்து கூறுகையில் :ஊடகவியலாளர்களின் தொழில்சார் தன்மை மற்றும் அது சார்ந்த துறையில் மேம்பாட்டையும் ஏனைய தொழில் துறையினருக்குக் கிடைக்கின்ற தொழில் அங்கீகாரத்தை ஊடகவிய லாளர்களுக்கும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த அதிகார சபை ஊடாக ஊடகங்களை கட்டுப்படுத்தாது அதற்குப் பதிலாக ஊடகவியலா ளர்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஊடகவியலாளர்களுக்கென அரசாங்கம் வழிகாட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஊடகவியலாளர்களின் தொழில்சார் விழுமியங்களை மேம்படுத்தும் வகையிலேயே இதனை அறிமுகப் படுத்த உள்ளோம்.

பயங்கரவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்த நாம் இன்று நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்கிறோம். ஆகவே நாட்டின் அபிவிருத்திக்கு ஊடகத் துறையின் பங்களிப்பும் அவசியம். இதனையொட்டி ஊடகத்துறை வளர்ச்சிக்காக அதிகார சபை ஒன்றினை அமைக்க ஆலோசித்து வருகிறோம்’

ஊடகத்துறை தொடர்பாக எதிர்கால வேலைத்திட்டம் ஒன்றினை அமைக்க வேண்டும். கலந்துரையாடல்கள் மூலம் இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என திட்டமிடப்பட வேண்டும். ஊடகவியலாளர்களுக்கு கடன் கொடுத்து கடனாளிகளாக்காமல் அவர்க ளுக்கு தேவையான முதலீடுகளை பெற் றுக் கொடுத்து பொருளாதார ரீதியாக பலம் மிக்கவர்களாக மாற்றப்பட வேண்டும்.

ஊடகத்துறையில் நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்யவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

யுத்தத்துக்குப் பின்னரான சர்வதேச சவால்கள் மற்றும் மக்கள் சபை கருத் திட்டத்தின் ஊடாக மக்களை வலுப்பெறச் செய்தல் ஆகிய தொனிப் பொருளில் கருத் தரங்கில் விரிவுரைகள் நடைபெறவுள்ளன. வெகுசன ஊடக அமைச்சும் அரச தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அரச கொள்கைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் கருத்தரங்கு நேற்று கண்டியில் ஆரம்பமானது.

இன்றைய நிகழ்வில் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் பீ. பி. கனேகல மற்றும் அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல உட்பட பலர் கலந்துகொள்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக