20 ஜூலை, 2010

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் ஆசிய வலய வறுமை ஒழிப்பு மாநாட்டில் பிரதமர்

வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட் டங்களை வெற்றிகரமாக முன்னெ டுப்பதற்கு அனைத்து நாடுகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன ஆகிய வலய வறுமை ஒழிப்பு மாநாட்டில் தெரிவித் துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் டி. எம். ஜயரத்ன சீன குமீமின் நகரில் நடைபெறும் ஆசிய வலய வறுமை ஒழிப்புக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

இதன் போது மேலும் தெரிவித்த பிரதமர், இலங்கையில் வறுமை ஒழிப்புக் கான வலுவான வேலைத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்துடன் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் துரித அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்து ழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஆசிய வலய வறுமை ஒழிப்பு மாநாட் டிற்கு ஆசிய வலய நாடுகளின் அனைத்து தலைவர்கள் மற்றும் உயர் மட்டப் பிரதி நிதிகளும் வருகை தந்திருந்தனர்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத் தினை மேற்கொண்டிருந்த பிரதமர் டி. எம். ஜயரத்னவை ரூமிமின் விமான நிலை யத்தில் சீனாவின் துணைப் பிரதமர் ஹைலியான்கியூ வரவேற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக