13 ஜூலை, 2010

ஐ.நா நிபுணர் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்-



ஐ.நா பொதுச்செயலர் பான்கீ மூன் இலங்கை தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐரோப்பிலுள்ள இலங்கையர்களும், பல்வேறு அமைப்புகளும் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை ஜெனீவாவில் இன்று இடம்பெறுகின்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கவென ஐக்கிய இராஜ்ஜியம், பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, நோர்வே உட்பட ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்கள் சுவிஸ்லாந்துக்கு செல்லவிருப்பதாக கூறப்படுகின்றது. இலங்கையின் இறைமையைப் பாதுகாப்பதற்கான அமைப்பினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக