13 ஜூலை, 2010

தெ.கொரிய யுத்த கப்பல் மூழ்கடிப்பு : பேச்சு வார்த்தை ஒத்தி வைப்பு

தென் கொரிய யுத்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை குறித்த ஐ.நா சபையுடனான பேச்சுவார்த்தையை வட கொரியா ஒத்தி வைத்துள்ளது.

தென்கொரியாவுக்குச் சொந்தமான போர்க்கப்பல் கடந்த மார்ச் மாதம் வடகொரியாவால் மூழ்கடிக்கப்பட்டதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் 46 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான் பேச்சுவார்த்தை வடகொரிய தலைநகர் பியொன்ஜியங்கில் இடம்பெற இருந்தது. சில நிர்வாக காரணங்கள் காரணமாக இப்பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக