13 ஜூலை, 2010

செறிவூட்டப்பட்ட 20 கிலோ யுரேனியம் தயார் ஈரான் அறிவிப்பு

ஈரான் நாடு உலக நாடுகளின் மிரட்டலை மீறி, 20 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து உள்ளது. இதை ஈரானின் அணுசக்தி தலைவர் அலி அக்பர் சலேகி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

யுரேனியத்தை செறிவூட்டுவதை ஈரான் கைவிடவேண்டும் என்று உலக நாடுகள் அமெரிக்காவின் தலைமையில் வலியுறுத்தின. மின்சாரத்துக்காக என்ற பெயரில் நாங்கள் அணுகுண்டு தயாரிக்க இருக்கிறோம் என்று தான் அந்த நாடுகள் எங்களை எதிர்த்தன. நாங்கள் அமைதி நோக்கத்துக்காக தான் அதை செறிவூட்டி இருக்கிறோம். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் அணுஉலைக்கூடத்துக்கான எரிபொருளை நாங்களே தயாரிப்போம். இதற்கான தொழில்நுட்பத்தை நாங்கள் ஏற்கனவே பெற்று விட்டோம்.

இவ்வாறு சலேகி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக