13 ஜூலை, 2010

தனுனவின் தாயாரை நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவு

தனுன திலகரட்னவின் தாயாரை அடுத்த மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்மீது சட்டமா அதிபர் மீண்டும் குற்றச்சாட்டுக்களை இன்று சுமத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனுனவின் தாயாரை எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று மன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ன ஹை கோப் ஆயுத ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தேடப்படும் நபராக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனுனவின் தாயார் அசோகா திலகரட்ன, இலங்கையின் நிதி சட்டங்களுக்கு புறம்பாக, 52 ஆயிரத்து 700 அமெரிக்க டொலர்கள், 20 ஆயிரம் ஸ்டேலிங் பவுண் மற்றும் 15 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை வங்கி வைப்பகத்தில் வைத்திருந்தமை தொடர்பில் இக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக