3 ஜூலை, 2010

தமிழ்க்கட்சிகள் ;மீண்டும் சந்திப்பு சந்திரஹாசன், வரதர், டக்ளஸ், சங்கரி, சித்தர் உட்பட பிரமுகர்கள் பங்கேற்பு




தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு போன்றவை குறித்து பொது இணக்கப்பாட்டுக்கு வரும் நோக்குடனான தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு நேற்று இரண்டாவது தடவை யாகவும் கொழும்பில் நடைபெற்றது.

ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடகிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன் ஆகியோருடன் த. ம. வி. பு. சார்பில் கைலேஷ்வரராஜா, நிஷாந்தன் ஆகியோரும் முதல் முறையாக கலந்துகொண்டனர்.

தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்து உறுப்பினர் களும் நேற்றைய சந்திப்பின் போது கருத்துக்களை முன்வைத்தனர்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள், எதிர்கால திட்டங்கள், குறுகிய கால திட்டங்கள், மக்களின் உடனடித் தேவைகள், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அணுகுமுறை போன்ற விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டிய விடயங்கள் அடுத்தடுத்து வரும் கூட்டங் களில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் குறித்து வரைபு ஒன்றை தயாரிக்கவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்ப ட்டது.

இதற்கென 8 பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. எதிர்வரும் 7ஆம் திகதி தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் மீண்டும் கூடும் போது மேற் படி குழு தயாரிக்கும் வரைபு சமர்ப்பிக்க ப்படும்.

இந்த வரைபின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகளை தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் மேற்கொள்ளும். அத்துடன் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் மேற்படி தமிழ்க் கட்சிகளின் ஒன்றியத்தினுள் உள்வாங்குவது தொடர்பாகவும் அனைத்து கட்சிகளும் செயற்படுவது என நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக