3 ஜூலை, 2010

3 இலங்கை மீனவர்கள் விடுதலை இலங்கை கடற்படையிடம் கையளிப்பு

இந்தியாவில் கைது செய்யப்பட்டி ருந்து விடுவிக்கப்பட்ட 13 இலங்கை மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் நாடு திருப்பியுள்ளனர்.

இந்திய கடலோர காவற்படை யினரால் கைது செய்யப்பட்டிருந்த இந்த மீனவர்களின் இரண்டு படகுகள் ‘லைலா’ புயலால் திருத்திய மைக்க முடியாதவாறு சேதமடைந்து விட்டன. இதனால், விடுதலையான இவர்களை இலங்கை - இந்திய சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கடலோர காவற்படையினர் இலங்கை கடற்படையினரிடம் கைய ளித்தனர்.

கடற்படையினர் இவர்களை ரண விக்கிரம கப்பல் மூலம் நேற்று முன் தினம் (01) மாலை பொறுப்பேற்று காங்கேசன்துறை துறைமுகத்திற்குக் கொண்டு வந்தனர். அதன் பின்னர் மீனவர்கள் சொந்த ஊர் செல்ல போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.

கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளும் கடற்படையினரும் இணைந்து மீனவர்களின் துரித விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக