3 ஜூலை, 2010

மட்டக்களப்பில் ஐநா உயர்ஸ்தானிகரம் மூடப்படவில்லை : யு.என்.எச்.சி.ஆர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் மூடப்பட்டு விட்டதாக வெளியான செய்தி மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதே தவிர முற்றாக மூடப்படவில்லையென யு.என்.எச்.சி.ஆர் மட்டக்களப்பு அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னமும் 93 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டியுள்ளது.அவை பூர்த்திசெய்யப்பட்டதும் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் மட்டக்களப்பிலுள்ள இவ்வலுவலகம் தனது செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளும். எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக