3 ஜூலை, 2010

தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கு வதற்கான நடைமுறைகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு






தூத்துக்குடி துறைமுகத் தில் ரூ. 18கோடி மதிப்புள்ள 4 திட்டப்பணிகள் தொடக்க விழாவில் கலந்து கொள்ள மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் மோகன்தாஸ் நேற்று தூத்துக்குடி வந்தார். திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கு வதற்கான நடைமுறைகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. தூத்துக்குடி- கொழும்பு இடையே முதல்கட்டமாகவும், ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே 2-வது கட்டமாகவும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

பயணிகள் கப்பல் போக்கு வரத்தை அரசே நடத்தும் திட்டம் எதுவுமில்லை. தனியார் கப்பல் நிறுவனங்கள்தான் இந்த பயணிகள் கப்பலை இயக்கும் இந்த திட்டத்தில் பயணிகள் விசா இல்லாமல் சென்று வரலாமா? அல்லது பயணம் செய்ய விசா வேண்டுமா? என்பதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும்,

சேது சமுத்திர திட்டத்தில் தற்போது எந்தவித முன்னேற்றமும் இல்லை. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்ப தால் எந்த பணியும் நடைபெறவில்லை. இந்த திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறை வேற்றுவது தொடர்பான சுற்றுச்சூழல் ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக