3 ஜூலை, 2010

மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு

மரபணு சோதனை மூலம் ஒரு மனிதனின் வாழ்நாளை கண்டுபிடிக்க முடியும். மனிதன் பிறக்கின்ற போதே அவனது இறப்பும் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் அவன் எத்தமரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்புனை நாள் உயிருடன் வாழ்ந்துவிட்டு இந்த மண்ணுலகை விட்டு மறைவான் என்று இதுவரை யாராலும் கணக்கிட முடியாமல் இருந்தது.

ஆனால் தற்போது ஒரு மனித உடலில் உள்ள மரபணுக்களை வைத்து அவனது வாழ்நாள் கணக்கிட முடியும் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆய்வை அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் பயோலா செபாஸ்தியானி, தாமஸ் பெர்ல்ஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

இவர்கள் நியூ இங்கிலாந்து பகுதியில் 100 ஆண்டுகள் வாழ்ந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பல பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

அப்போது மரபணுக்களின் எண்ணிக்கையை பொறுத்து மனிதனின் வாழ்நாளை கணிக்க முடியும் என்றும் தெரியவந்தது. சில மரபணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் தருகின்றன. இதன்மூலம் வாழ்நாள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதையும் அறிய முடிந்தது.

இந்த ஆய்வின் மூலம் ஒரு மனிதனின் ஆயுள்காலத்தை 77 சதவீத அளவு துல்லியமாக கணக்கிட முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக