3 ஜூலை, 2010

அவையில் ஒழுக்கமாக நடந்து கொள்ளுமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

அவையில் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளுமாறு சபாநாயகர் சமால் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனிப்பட்ட நபர்களின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படும் வகையிலான விமர்சனங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கக் கூடாதென அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற பார்வையாளர் கூடத்தில் குழுமுவதனால் அவதானமாக செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவை நடவடிக்கைகளை பார்ப்பதற்காக மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால் நிதானத்துடன் செயற்படுமாறு உறுப்பினர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பக்கச் சார்பற்ற முறையில் சபாநாயகர் எடுத்தத் தீர்மானம் பாராட்டுக்குரியதென எதிர்க்கட்சிகளி;ன் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு பொருத்தமற்ற வசனங்களைப் பயன்படுத்தக் கூடாது என சபாநாயகர் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக