23 ஜூன், 2010

யாழ்., திருமலையில் அடுத்த மாதம் மத்திய வங்கிக் கிளைகள் திறப்பு

மத்திய வங்கியின் பிராந்தியக் கிளைகளை யழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் அடுத்த மாதம் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நிர்வாகப் பரவலாக்கம் மற்றும் வாடிக்கையாளர் நலன் என்பவற்றை கருத்திற் கொண்டு பிராந்தியக் கிளைகள் அமைக்கும் திட்டதின் கீழ் அமைக்கப்படும் ஐந்தாவது கிளை இதுவாகும்.

ஏற்கனவே மாத்தளை, மாத்தறை, அனுராதபுரம் ஆகிய இடங்களில் இலங்கை மத்திய வங்கியின் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடபகுதியின் புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் போன்றவற்றின் போது இது பெரிதும் உதவியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக