23 ஜூன், 2010

ஜெனரல் சரத்துக்கு விசேட பாதுகாப்பு : நீதிமன்றம் உத்தரவு






தேசிய முன்னணித் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்தே, விசேட பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்தது.

ஜெனரல் சரத் பொன்சேகா 'ஹைகோப்' ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

மேலும், ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக