23 ஜூன், 2010

முதல்வர் கருணாநிதிக்கு ஜ. ம. வி. முன்னணியின் சர்வதேச அமைப்பு வாழ்த்து

பண்டைய மொழிகளில் ஒன்றாக இருக்கும் தமிழ் மொழியை சுவாசிக்கும் எவரும் இன்றைய நூற்றாண்டுக்கு நிகராக தமிழை தாங்கி நிற்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை மறந்துவிட முடியாது.

இவ்வாறு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச அமைப்பு முதல்வர் கருணாநிதியை வாழ்த்துகின்றது.

மேலும் தனது வாழ்த்துச் செய்தியில்,

"தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்திய அரசியலில் முக்கிய பாகம் வகிக்கும் கலைஞர் அவர்களுக்கு போதிய அளவில் நேரம் இல்லாத போதும், போதும் என்ற அளவுக்கு அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிவரும் தொண்டினை அளவிட முடியாது.

எமது தாய்மொழியான தமிழை இமயம் அளவுக்கு அவர் உயர்த்தி வைத்திருக்கின்றார். தமிழ் மொழி மீது மட்டும் அல்லாது அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தாழ்ந்து போய்விடக் கூடாது என்பதற்காக அவர் அயராது உழைப்பவர்.

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்ததில் ஒரு தடைவ அவர் தனது முதல்வர் பதவியையே இழந்தவர். தமிழ் அவருக்கு உயிர், அந்த உயிரை காப்பாற்றுவதற்காகவே அவர் தனது பதவியைப் பயன்படுத்தி வருகின்றார் என்று உரைத்தால் அது மிகையாகாது.

தமிழ் வாழ, அந்த மொழியை பேசும் இனம் வாழ அந்தத் தலைவன் நீடூழி காலம் வாழவேண்டும் என்று நாம் வாழ்த்துகின்றோம்.

உலகெங்கிலுமுள்ள தமிழ் அறிஞர்களை அழைத்து தமிழகத்தில் மாபெரும் அளவில் தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்தும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை நாம் இன்றைய தினத்தில் வாழ்த்தி வரவேற்கின்றோம்.

உலக வளர்ச்சிகளுக்கு ஏற்ப தமிழ் ஓங்கி நிற்க, பண்டைய மொழிகளின் ஒன்றான தமிழ் மொழி பேசும் மக்கள் பயனடைய, உலகெங்கும் தமிழ்மொழி ஓங்கி ஒலிக்க, ஈழத்தமிழினம் தன்மானத்துடன் வாழ, அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க முதல்வர் கலைஞர் கருணாநிதி காலமெல்லாம் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்" என்று மேற்படி அமைப்புத் தெரிவித்திருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக