9 மே, 2010

சபையை இரவு வரை நடத்த யோசனை



நாடாளுமன்றத்தை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 7.30 மணிவரையிலும் நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பெரும் பங்காற்றவிருப்பதனால் சபை கூடும் நேரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1983 ஆம் ஆண்டிற்கு பின்னர் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகம்கொடுத்த பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே நாடாளுமன்றம் காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 வரை நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக