9 மே, 2010

ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து நிறுத்தம்





ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்தது அதில் இருந்து வெளியான சாம்பல் பல ஆயிரம் மைல் தூரம் காற்றில் பரவியதால் கடத்த மாதம் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அங்கு மேலும் ஒரு எரிமலை வெடித்தது.

அதில் இருந்து வெளியான சாம்பல் விமான போக்குவரத்தை முடக்கியுள்ளது. ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல் நாடுகளில் விமான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. ஸ்பெயினில் 19 விமான நிலையங்கள் மூடப்பட்டன. 673 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

போர்ச்சுக்கலில் லிஸ்பன், ஒபர்மோ, பேரோ விமான நிலையங்களில் இருந்து புறப்படும் 104 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. லண் டனில் இருந்து கேனரி தீவுகள், ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளுக்கு செல்லும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இருந்து வட அமெரிக்கா செல்லும் விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக